subjectnarrates.com

Poacher – யானைகளின் முக்கியத்துவமும் மனிதர்களின் அலட்சியமும் அரசியலும்…!

காடுகளை உருவாக்கவும் விரிவாக்கவும்‌ மிக முக்கிய காரணமாக இருப்பது யானைகள் தான். காலநிலை மாற்றத்தை எதிர்த்து சண்டை போடவும் சூழலியல் அமைப்பை சமன்படுத்தவும் இயற்கைக்கு யானைகள் இன்றியமையாததாக இருக்கிறது. தினமும் 12 முதல் 16 மணி நேரம் உணவுக்காக அடர்ந்த அடவிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சாணங்களாக விதைகளை பரப்பியும் பிற உயிரினங்களுக்கு பாதையையும் வாழ்வியலுக்கும் உதவிகரமாக கிட்டதட்ட ஒரு இயற்கை இன்ஜினியராக இருக்கின்றன. மானுடவியல் மற்றும் சூழலியலுக்கு யானைகள் மிக மிக அவசியமாகின்றன. தந்தங்களுக்காக களிறுகளை […]

Continue Reading
SubjectNarrates.com

கடலுக்கு அப்பால் – தமிழின் மிகச்சிறந்த சர்வதேச நாவல்!

நூல் அறிமுகம்:கடலுக்கு அப்பால்ப.சிங்காரம் மேற்குலக நாடுகள் வரலாற்றில் தாங்கள் எதிர்கொண்ட போர் குறித்தும் அதன் அரசியல் காரணங்கள் அது ஏற்படுத்திய தாக்கம் நேர்ந்த விளைவுகள் பாதிக்கப்பட்டோருக்கான நீதி என்று எக்கச்சக்க புத்தகங்களும் Schindler’s List முதல் Oppenheimer வரை பல சர்வதேச திரைப்படங்களும் இன்றும் வந்துகொண்டு தான் உள்ளன. அதே கால கட்டத்தில் அடிமைகளாக கூலிகளாக புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் இரண்டாம் உலகப்போர் குறித்தும் நம்மிடம் இருக்கக்கூடிய ஆகச்சிறந்த படைப்பு கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு […]

Continue Reading

Neru – பாபநாசம் சுயம்புலிங்கம் மகளுக்காக நீதி கேட்டு Court சென்றிருந்தால் . . . ?

ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய உட்சபட்ச பொறுப்பு இருப்பது நீதிமன்றங்களுக்கே. ஆனால் அங்கேதான் பணநாயகமும் அரசியல் நாடகங்களும் நடந்தேறி நீதிதேவன் நாட்டியமாடுகிறான். நீதித்துறை சாமானிய மக்களுக்கு சேவை செய்ய தேவை சீர்திருத்தம். நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறை, தேர்ந்தெடுப்பவர்களை தேர்ந்தெடுக்கும் முறை அதில் வெளிப்படைத்தன்மை, தாய்மொழியில் வழக்காடும் உரிமை, விகிதாச்சார இடப்பங்கீடு என்று மறுபரிசீலனை செய்து சீர்த்திருத்த வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளது. இவற்றையெல்லாம் சரிசெய்யாத வரை நீதித்துறை மீது சாமினிய மக்களுக்கு முழுநம்பிக்கை வராது. பணக்காரர்களுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் […]

Continue Reading

ஜோ – பயணித்த பாதையிலே மீண்டும் ஒரு பயணம்…

சேது முதல் அர்ஜூன் ரெட்டி வரை பழக்கப்பட்ட அதே நாயக அடாவடிக்காதல் நிறைந்த முற்பாதி, மெளன ராகம் முதல் ராஜா ராணி வரை நிச்சய திருமணத்திற்கு பிறகான கணவன் மனைவி இடையேயான சண்டைகள் புரிதல்கள் கொண்ட பிற்பாதி. ஆட்டோகிராப், பிரேமம் போன்ற படங்களின் சாயல். இதுதான் ஜோ திரைப்படம். பழக்கப்பட்ட அடித்து துவைக்கப்பட்ட கதைக்களம் தான் என்றாலும் திரைக்கதை மற்றும் ஆக்கத்தை நம்பி எடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம். சில இடங்களில் அது கைகொடுத்திருக்கிறது. காதலர்களுக்கிடையேயான […]

Continue Reading

காதல் The Core – LGBTQIA மனிதர்களுக்கு கரம் கொடுப்போம்! கண்ணியமாக நடத்துவோம்!

சமூகத்தின் மிகவிளிம்பு நிலையில் (Socially Marginalized) தங்களுக்குள் ஏற்படும் இயற்க்கை மாற்றத்தால் ஒதுக்கி வைக்கப்படும் இன்னும் சொல்லப்போனால் ஒடுக்கி விரட்டப்படும் மனிதர்களான திருநங்கை, திருநம்பி, ஓர்பால் ஈர்ப்பாளர்கள், இனக்கவர்வை விரும்பாதவர்கள், பலர்பால் ஈர்ப்பாளர்கள், இருபாலர் ஈர்ப்பாளர்கள் போன்றவர்களை LGBTQIA என்று குறிப்புடுவர். இயற்கையாக நிகழும் இத்தகைய மாற்றத்தின் காரணத்தை உலகளவில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் பல பத்தாண்டுகளாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் புவியியலிலும் சமூகத்திலும் (Geographically and Socially) எல்லா தரப்பட்ட மக்களாளும் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், வன்புறுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு […]

Continue Reading

12th Fail – அதிகாரத்தை அடைந்தால் போதுமா?

“சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்”“வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்”அதுதான் காலத்தின் குறி!–பேரறிஞர் அண்ணா படித்த வேலையற்ற இளைஞர்களின் நிலை குறித்த அண்ணாவின் அறிவுச் சொற்றொடர். இதைக் கூறி வருடங்கள் ஐம்பதை கடந்து விட்டாலும் பல நாடுகளில் இந்நிலை இன்றும் மாறவில்லை. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில். இஸ்ரேலில் பாலஸ்தீனிய இனப்படுகொலை (Genocide) நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் போடுகிறது. போரில் சேதமடைந்த கட்டிடங்களை சரிசெய்ய மீட்டுருவாக்கம் செய்ய கட்டிட தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு முன் இருந்த […]

Continue Reading

Parking – பெருநகர மயமாக்கலின் பிரதான பிரச்சனை

தமிழ் இலக்கியம் புறநானூறில் “உண்பது நாழி உடுப்பது இரண்டே” என்ற தத்துவம் இருபத்தியோராம் நூற்றாண்டில் காலாவதியாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு Tamil Society இன்று Consumer Society-யாக மாற்றப்பட்டுவிட்டது. Globalization-ம் Privatisation-ம் தாறுமாறாக வளர்ந்து மனிதர்களின் தேவைகளை தேவைக்கு அதிகமாக பெருக்கிவிட்டன. பதினான்காயிரம் கிலோ மீட்டருக்கு அந்தப்பக்கம்(America) இருந்து வலைகளை வீசுகிறது அதில் சிக்கும் சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை அந்த வளையில் விழுந்து இரையாகின்றனர். இது ஒருபுறமிருக்க உலகமயமாக்கல் உளவியல் ரீதியாக, மிகப்பெரும் […]

Continue Reading